This Article is From Aug 08, 2019

இன்று இரவு 8 மணிக்கு வானொலியில் பிரதமர் மோடி உரை!

இதுகுறித்து அகில இந்திய வானொலியின் அதிகார்ப்பூர்வ ட்வீட்டர் பதிவில், இந்திரப்பிரஷ்டா, ரெயின்போ எஃப்.எம் மற்றும் கோல்ட் எஃப்.எம் உள்ளிட்ட சேனல்களில்.பிரதமர் மோடியின் உரையை கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

New Delhi:

இன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன்? 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் மோடி விளக்கம் அளிக்கிறார். 

முன்னதாக, இதுகுறித்து அகில இந்திய வானொலியின் அதிகார்ப்பூர்வ ட்வீட்டர் பதிவில், இந்திரப்பிரஷ்டா, ரெயின்போ எஃப்.எம் மற்றும் கோல்ட் எஃப்.எம் உள்ளிட்ட சேனல்களில்.பிரதமர் மோடியின் உரையை கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் இந்த ட்வீட்டர் பதிவு நீக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த மார்ச் 27ம் தேதி மக்களவை தேர்தலின் போது மக்களிடம் உரை நிகழ்த்திய மோடி ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான அரசு, அண்மையில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய மதோசாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கிறார். 

இதுகுறித்து தகவல் பிரதமர் மோடியின் அதிகராப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தவும் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னோட்டம் போன்று இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். 

.