This Article is From Dec 31, 2018

அந்தமான் நிகோபரில் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி

அந்தமான் நிகோபரில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

Advertisement
இந்தியா

அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி

New Delhi:

அந்தமான் நிகோபர் தீவுகளில் பிரதமர் மோடி நாளை சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். ஞாயிறன்று போர்ட் ப்ளேருக்கு வரும் மோடி அங்கிருந்து சுனாமி நினைவிடத்திற்கு செல்வார்.


அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி மேடி அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின்னர் சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மோடி தொடங்கி வைக்க உள்ளார். அராங் தொழில்துறை பயிற்சி கல்லூரி உள்பட சில திட்டங்கள் அவரால் தொடங்கப்பட உள்ளது. 


பின்னர் போர்ட் ப்ளேரில் செல்லுலார் சிறைக்கு மோடி செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் மோடி, மரினா பார்க்கில் உள்ள நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். 


அவரது நினைவாக தபால் தலையையும் மோடி வெளியிடுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement