நாட்டின் 15 பணக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குகிறார் பிரதமர் மோடி, நாங்கள் ஏழைகளுக்கு குறைபட்ச பலன்களை உறுதி செய்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் 15 பணக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குகிறார் பிரதமர் மோடி, நாங்கள் ஏழைகளுக்கு குறைபட்ச பலன்களை உறுதி செய்கிறோம்.
மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.
இதேபோல், வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்த மிக மோசமான திட்டங்கள் மாற்றப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி வீணாக்கி விட்டார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எதையும் நிறைவேற்றவில்லை எனக் கூறினார்.