हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 29, 2019

40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மோடி

திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
Kolkata:

மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 125-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மே.23 தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மம்தாவை விட்டு விலகுவார்கள். இன்று கூட திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

Advertisement

மேலும், மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் முதல்வராக நீடிப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement