This Article is From Jun 12, 2018

நிரவ் மோடி விவகாரம்… ஆர்.பி.ஐ ஆளுநரை வறுத்தெடுத்த எதிர்க்கட்சியினர்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், நிரவ் மோடி விவகாரம் குறித்து கேள்வி கேட்டு துளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிரவ் மோடி விவகாரம்… ஆர்.பி.ஐ ஆளுநரை வறுத்தெடுத்த எதிர்க்கட்சியினர்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

ஹைலைட்ஸ்

  • நிரவ் மோடி, தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார்
  • அவரை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது
  • நிரவ் மோடி, ரூ.13,000 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது
New Delhi:

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை கைது செய்ய அனைத்து வேலைகளையும் சிபிஐ செய்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற ஸ்டாண்டிங் குழு முன்னிலையில் வங்கித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்க வந்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல். அவரை, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், நிரவ் மோடி விவகாரம் குறித்து கேள்வி கேட்டு துளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

nirav modi

தங்க நகை வியாபாரியான நிரவ் மோடி, மும்பையில் இருக்கும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாட பஞ்சாப் நேஷனல் பாங்க், மும்பை கிளையில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனை வாங்க அவர் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. ஆனால், அதை சரியாக பரிசீலிக்காமல் கடனை வாரி இரைத்துள்ளது பிஎன்பி. நிரவ் மோடிக்கு கடனாக கொடுக்கப்பட்டத் தொகை கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், பிஎன்பி வங்கி இந்த மோசடியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னாலேயே இங்கிலாந்துக்கு பறந்துவிட்டார் நிரவ் மோடி. 
 

punjab national bank


இதையடுத்து, அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அவருக்கு தொடர்ந்து, நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பி வருகிறது. ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் சுற்றி வருகிறார் நிரவ் மோடி. இந்நிலையில், நாடாளுமன்ற ஸ்டாண்டிங் கமிட்டி முன்னிலையில் வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரை, 'ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் நிதி குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இப்படி கண்காணிக்கப்படும் போதே இவ்வளவு பெரிய தொகை எப்படி பெறப்பட்டு உள்ளது. அப்படியென்றால், ரிசர்வ் வங்கிக்கு சரியாக கண்காணிக்கும் திறன் இல்லையா? ரிசர்வ் வங்கிக்கு யாரைப் பற்றியும் விசாரணை செய்யும் அதிகாரம் இருக்கிறது. பிறகு எப்படி நிரவ் மோடி பற்றிய தகவல்களை சரி பார்க்கமால் விட்டது? இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கி கிளைகளிலும் ஆய்வு செய்ய ஆர்.பி.ஐ-க்கு அதிகாரம் உள்ளதுதானே? பிறகு ஏன் தனது அதிகாரத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்தவில்லை?' என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கடைசியாக நிரவ் மோடி, டேவோஸில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

.