Read in English
This Article is From Oct 02, 2018

சென்னையில் ஏசி கேஸ் கசிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டரில் ஏசியை இயக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Advertisement
நகரங்கள் Posted by (with inputs from PTI)

தூக்கத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினர்.

Chennai:

சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் நகரில் வசித்து வந்த குடும்பத்தினர் இரவு தூங்கும் போது ஏசி கேஸ் கசிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்களன்று வழக்கம் போல் இரவு தூங்க சென்ற அந்த குடும்பத்தினர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பேரும் உயிரிழந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த திங்களன்று இரவு ஏற்பட்ட மின்வெட்டினால் இன்வெர்ட்டரில் ஏசியை இயக்கியுள்ளனர். அப்போது ஏசியில் இருந்து வெளியேறிய விஷவாயுவை சுவாசித்ததால் தூக்கத்திலேயே 3 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
 

Advertisement