Read in English
This Article is From Mar 15, 2019

வதந்தி பரப்பியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் மருமகன் மீது வழக்குப் பதிவு!

ஜெயராமன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுகதான் தன்னை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பி வருவதாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை தொடர்புபடுத்தி சபரீசன், வதந்தி பரப்பியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஜெயராமன்

Chennai:

தமிழக துணை சபாநாயகர் வி.ஜெயராமன் குறித்து வதந்தி பரப்பியதாக கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. 

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை தொடர்புபடுத்தி சபரீசன், வதந்தி பரப்பியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஜெயராமன். 

பொள்ளாச்சி ஜெயராமன் இப்படி தடாலடி நடவடிக்கையில் இறங்கவே, திமுக தலைவர் ஸ்டாலின், தன் சார்பில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘என் பெயருக்குக் கலங்கம் ஏற்படும் வகையில் ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார். நானும் எனது குடும்பமும் மற்றும் எனது கட்சியும்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெயராமனுக்கு எதிராக கருத்து கூறி வருவதாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

ஜெயராமன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுகதான் தன்னை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பி வருவதாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement