This Article is From Feb 13, 2019

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தற்கொலை!

உசிலம்பட்டி அருகே காதலித்த பெண்ணை திருமனம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தற்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த சதீஸ் மீண்டும் பெற்றோரிடம் காதலித்த பெண்ணை திருமணம் முடித்து வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காவலர் சதீஸ் இன்று காலை தனது அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தசம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

.