This Article is From Dec 20, 2018

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போலீசார் குவிப்பு; என்ன நடந்தது..?

தற்போது தனியார் மண்டபம் ஒன்றில் விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்து வைக்கப்பட்டுள்ளனர்

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போலீசார் குவிப்பு; என்ன நடந்தது..?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான பல புகார்களை எதிர் அணியினர் தெரிவித்து வருகின்றனர். அதில் டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டிட்டனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்தும் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள பணத்தை முறைகேடு செய்துள்ளதாகவும், தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை' சிறிய தயாரிப்பாளர்களை வசிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இன்று காலை 11 மணியளவில் விஷால், தனது ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் செனறு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பினர் போட்டிருந்தப் பூட்டை விஷால் உடைக்க முயன்றார்.

அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து விஷாலைத் தடுத்துநிறுத்தினர். அப்போது, விஷாலுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து, விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களான மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்தனர். மன்சூர் அலிகானை மட்டும் இழுத்துத் தள்ளி வலுக்கட்டாயமாக கைது செய்து தனி வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைது குறித்து தெரிவித்த விஷால், கூறியதாவது ‘எங்கள் அலுவலகத்துக்குள் செல்வதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். கேள்வி கேட்டதற்கு உரிய பதில் சொல்லாமல் கைது செய்துகின்றனர் காவல்துறையினர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நான் இருக்கும்போது எங்களுடைய அலுவலகத்தில் மற்றொருவர் பூட்டு போடுவது சட்டப்படி குற்றமாகும். சட்டப்படி பூட்டு போட்டு அவர்களை தான் காவல்துறையினர் கைது செய்திருக்க வேண்டும் இப்படி இருக்க காவல்துறை அராஜகமாக எங்களை தடுத்து கைது செய்துள்ளது. என அவர் தெரிவித்தார்கள்.

தற்போது தனியார் மண்டபம் ஒன்றில் விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்து வைக்கப்பட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போலீசார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் தி நகரில் அமைந்துள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த வண்ணமாக இருக்கிறார்கள். நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன் அவர்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அவர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாளை நான்கு படங்கள் வெளியாகக் கூடிய சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.