This Article is From Jul 26, 2019

பிக்பாஸ் போட்டியாளர்  மீரா மிதுனிடம் பண மோசடி வழக்கில் காவல்துறை விசாரணை

பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனிடம் பண மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் எனினும் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளதால் மீராவை கைது செய்ய வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

Advertisement
Entertainment Posted by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில்  மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுனிடம் காவல்துறை திடீரென விசாரணை செய்துள்ளது. 

‘மிஸ் குயின் ஆஃப் சவுத்' அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். மீரா மிதுன் மீது பல மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்நிலையில் எழும்பூர் காவல்துறையினர் பூந்தமல்லியில் உள்ள  பிக்பாஸ் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனிடம் பண மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் எனினும் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளதால் மீராவை கைது செய்ய வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

Advertisement