This Article is From Jan 30, 2019

விதிகளை மீறியதற்காக வடக்கு ரயில்வேக்கு ரூ.1 கோடி அபராதம்!

மாசுபாடு ஆணையத்தின் உத்திரவுகளை மீறியதால் இந்த உடனடி நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறியதற்காக வடக்கு ரயில்வேக்கு ரூ.1 கோடி அபராதம்!

வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் இரண்டு ஸ்தாபனங்களும் ரூ.1கோடி ஆபராதத்தை செலுத்த வேண்டும்

New Delhi:

மத்திய மாசுபாடு வாரியம் சார்பாக விதிக்கப்பட்ட விதகளை மீறியதற்காக,டெல்லி நகராட்சி மற்றும் வடக்கு ரயில்வே துறை மீது ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தை வடக்கு ரயில்வே துறை மற்றும் டெல்லி மாநகராட்சி செலுத்தவில்லை என்றால் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என மத்திய மாசுபாடு வாரியம் அறிவித்துள்ளது.

வடக்கு ரயில்வே தொடர்ந்து கட்டிடங்களை தரைமட்டமாக்கி பின்னர் அதை சீர்செய்தலை தொடர்ந்து வந்த நிலையில் மத்திய மாசுபாடு வாரியம் நோட்டிஸ் அளித்து அபராதம் விதித்தது.

மேலும் மாசு கட்டுபாடு வாரியம் சார்பாக வழங்கப்படும் நோட்டிஸ் மற்றும் உத்திரவுகளை உடனடியாக கவனித்து 10 நாட்களுக்குள் நடவெடிக்கை எடுக்கவேண்டும்  என அறிவித்துள்ளது.

.