This Article is From Jun 20, 2018

செல்போனில் அதிக நேரம் பேசியதை கண்டித்த போது நடந்த விபிரிதம்

நீண்ட நேரமாக ஆகாஷ் வெளியே வராததால், உள்ளே சென்று ஆதிலட்சுமி  ஆகாஷ் தனது  புடவையால் தூக்கிட்டு கொண்டதை கண்டு  அதிர்ந்தார்

செல்போனில் அதிக நேரம் பேசியதை கண்டித்த போது நடந்த விபிரிதம்

புதுவையை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் பலராமனின் மூத்த மகன் ஆகாஷ் (16). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாணவனின் தாய் ஆதிலட்சுமி விரும்பி கேட்டதனால் தனது மகனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஆகாஷ் எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.அதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். அதிக நேரம் ஆகாஷ் செல்போன் பயன்படுத்தியதை அவரின் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். இந்நிலையில், ஆகாஷ் மொபைலை தனது தாயார் இடம் ஒப்படைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவனது தாய் வேலைக்கு சென்று, மதியம் வீடு திரும்பி, ஆகாஷிக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார். சாப்பிட்டு விட்டு ஆகாஷ் வீட்டில் வேறொரு அறைக்கு சென்றுள்ளார்.

உடனே அவரை பிம்ஸ் மருத்துவமனை அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

.