This Article is From Jun 22, 2018

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மான்

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மான் தெரிவித்துள்ளார்.

Advertisement
நகரங்கள் Posted by (with inputs from NDTV)
தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மான் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மான் தெரிவித்தார்.
 

கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெயில் அதிகமாக உள்ளது. எனினும், ஜூன் மாதம் சென்னையில் வர வேண்டிய மழையைக் காட்டிலும், அதிக மழை பொழிந்துள்ளதாக வெதர்மான் தெரிவித்தார்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சிறிய இடைவேளைக்கு பின்னர், மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களுக்கு மழை வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றார். வெப்ப சலன மழை சென்னையில் இன்று முதல் தொடங்குவதாக தெரிவித்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள்ல் இடியுடன் கூடிய மழை பெய வாய்ப்புள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மான் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.​
Advertisement