ஜெய்பூரில் உணவு மற்றும் வழங்கல் சிவில் துறையின் அதிகாரிகள் கூட்டத்தின் நடுவில் ஆபாச பட வீடியோ க்ளிப் ஒன்று ஒளிபரப்பானது சங்கடத்தை உருவாக்கி விட்டது.
திங்களன்று செயலகத்தில் என் ஐ சி அறையில் செயலாளர் முக்தா சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அந்தக்கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரென்ஸ் போது ஆபாச வீடியோ ஒன்று தவறுதலாக திரையில் வரத் தொடங்கியது. உடனடியாக என்ஐசி இயக்குநரை அழைத்து இந்த விஷயத்தை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சுமார் 10 பேர் துறை சார் அதிகாரிகள் என்ஐசி பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். மாநிலத்தின் 33 மாவட்டங்களிலிருந்து மாவட்ட சபை அதிகாரிகள் கலந்துரையாடியதாக சின்ஹா தெரிவித்தார்.
பல திட்டங்களை மீளாய்வு செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது. என்ஐசி இயக்குநரின் அறிக்கையில் குற்றம் புரிந்த பணியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.