Read in English
This Article is From Jan 14, 2020

பிரக்யா தாகூருக்கு கடித உறையில் வந்த விஷ ரசாயனங்கள்

விசாரணையை தடயவியல் குழு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

வந்த கடித உறைகளில் சில உருது மொழியில் எழுதப்பட்டுள்ளன

Bhopal :

பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூருக்கு வந்த கடிதத்தில் தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் இருந்துள்ளன. இது குறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

பிரக்யா தாகூருக்கு வந்த கடித உறைகளில் இரசாயனங்கள் வந்துள்ளதாக எங்களுக்கு புகார் வந்தது. இந்த விஷயத்தில் நாங்கள் முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளோம் என்று போபால் துணை ஆய்வாளர் ஜெனரல் இர்ஷாத் வாலி செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார். வந்த கடித உறைகளில் சில உருது மொழியில் எழுதப்பட்டுள்ளன. 

மேற்கொண்டு விசாரணையை தடயவியல் குழு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். 

இதற்கிடையில் பிரக்யா தாகூரின் முகவரிக்கு வந்த பழுப்பு நிற உறை ஒன்றில் விஷ ரசாயனங்கள் இருப்பதாக புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

 அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போபால் காவல் கண்காணிப்பாளர் உமேஷ் திவாரி தெரிவித்தார். 
 

Advertisement