This Article is From Jan 10, 2019

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியிருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவால் உடனான இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

கெஜ்ரிவால் உடனான சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் தெரிவித்திருக்கிறது. நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். அதன்பின்னர் அளித்த பேட்டியில் அவர் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக கூறியிருந்தார்.

அவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருந்தார். அதேபோன்று ஆம் ஆத்மி தரப்பில் இருந்தும் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தையடுத்து, தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பான கருத்துகளைப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

.