This Article is From Apr 14, 2020

ஊழியர்களை பணியிலிருந்து நீக்காதீர்கள்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 வேண்டுகோள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.

ஊழியர்களை பணியிலிருந்து நீக்காதீர்கள்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 வேண்டுகோள்

'ஆரோக்கிய சேது' மொபைல் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

ஹைலைட்ஸ்

  • நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 வேண்டுகோள்!
  • உங்களிடன் பணிபுரியும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்காதீர்கள்
  • 'ஆரோக்கிய சேது' மொபைல் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யவும்
New Delhi:

உங்களிடம் பணிபரியும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்காதீர்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதேபோல், இன்றிலிருந்து ஏப்ரல்.20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல்.20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்குமேல், கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்' ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா அதிகமுள்ள ஹாட்ஸ்பாட்டுகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.

1. வீட்டில் உள்ள முதியவர்கள், குறிப்பாக ஏற்கனவே உடல் நலன் முடியாதவர்களை கூடுதல் கவனிப்புடன் பார்த்துக்கொள்ளவும். 

2. நமது வீட்டின் லட்சுமண கோட்டை யாரும் தாண்டாததை உறுதி செய்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை வாங்குவதற்காக வீட்டை வீட்டு வெளியே சென்றால், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

3. ஆயுஷ் அமைச்சகம் கூறிய அறிவுரைப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவும். தொடர்ந்து வெண்ணீர் அருந்தவும். 

4. கொரோனவை கண்டறியும் 'ஆரோக்கிய சேது' மொபைல் செயலியை செல்போனில் மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

5. ஏழை எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

6. உங்களது நிறுவனத்திலோ, தொழிற்சாலையிலோ பணிபுரியும் ஊழியர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள், அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டாம்,

7. கடைசியாக கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.