Read in English
This Article is From Aug 31, 2018

நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த பாடல் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

Advertisement
இந்தியா ,
New Delhi:

மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மாணிக்ய மலரே பூவி’ பாடல் வைரலானது. அதில், பிரியா வாரியரின் கண் சிமிட்டும் அசைவுகள் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது

இந்நிலையில், பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த பாடல் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த வழக்குகளை எதிர்த்து நடிகை பிரியா வாரிய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து, இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நடிகை பிரியா வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்துவதாக இல்லை என்று தெரிவித்தது. மேலும், அவர்மீது கூறப்பட்டுள்ள குற்றவியல் புகார்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
 

Advertisement