Read in English
This Article is From Nov 29, 2019

“ஏன் அவரை வெளியே விடக்கூடாதுன்னா…”- P Chidambramக்கு எதிராக வாதங்களை அடுக்கிய அமலாக்கத் துறை!

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். 

Advertisement
இந்தியா Edited by

முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார். சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. 

New Delhi:

அமலாக்கத் துறை (ED), முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambram) எதிராக தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ்மீடியா வழக்கில் (INX Media Case) கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தனக்கு வழக்கில் பிணை கொடுக்குமாறு சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு ஏன் ஜாமீன் வழங்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்கியது அமலாக்கத் துறை. 

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, “ப.சிதம்பரம், கஸ்டடியில் இருந்தாலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களிடம் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவராக இருக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் பெரும் நிதி சம்பந்தப்பட்டதாக உள்ளது. அவருக்குப் பிணை கொடுத்தால், அது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அரசு அமைப்பு மீதே மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

அமலாக்கத் துறை விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தமுடையதாக 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் 12 வெளிநாட்டு சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்றார். 

Advertisement

இதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல், “வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் தந்தை என்ற காரணத்தினாலேயே ப.சிதம்பரம், நியாயமற்ற முறையில் 98 நாட்களுக்கு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்துக்கு எதிராக இதுவரை ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை,” என்று எதிர்வாதம் வைத்தார். 

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார். சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. 

Advertisement

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 

Advertisement


 

Advertisement