This Article is From Dec 20, 2018

தயாரிப்பாளர் சங்க பிரச்னையை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம் - கடம்பூர் ராஜு பேட்டி

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அதன் தலைவர் விஷால் கைதுக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

விஷால் கைது விவகாரம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டியில் கூறியதாவது- தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இருந்தாலும் கூட முதல்கட்டமாக திரையரங்க உரிமையாளர்களை அழைத்து பேசினோம். அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு திரையரங்குகளை இயக்கினார்கள்.

அரசுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும், பல நிறுவனங்கள், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பிரச்னையை சுமுகமாக முடிக்க நடவடிக்கை எடுத்தோம்.

Advertisement

இன்றைக்கு நடந்துள்ள பிரச்னை அவர்களுக்கு உள்ளேயே ஏற்பட்டிருக்கும் பிரச்னை. சங்கத்தினர் வைத்த கோரிக்கையை விஷால் நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். அதன் அடிப்படையில் இன்றைக்கு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. அதனை அரசு கவனித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு ஏற்பட நடவடிக்கை எடுப்போம்.

Advertisement