हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 15, 2019

ஜூலை இறுதிக்குள் சந்திரயான் 2 - விண்ணில் செலுத்தப்படும் என தகவல்!!

இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட வேண்டியிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்த வேண்டியது நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement
இந்தியா Edited by

சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விண்கலத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Sriharikota:

தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் இம்மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை விண்கலம் விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 2:51-க்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ராக்கெட்டும், செயற்கைகோளும் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ராக்கெட்டை உந்திச் செல்லக்கூடிய திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட எரிபொருட்கள் ராக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டை முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர்தான் தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். 

Advertisement

உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி இருந்து.

இன்று அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

Advertisement

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்' என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும். 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 1000 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இஸ்ரோவின் தலைவரான் கே.சிவன் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பதட்டமான நேரமாக இருக்கும் இதற்கும் முன் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட விண்கலம் ஏவப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த விண்கலம்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.

Advertisement