বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 06, 2019

ஆதாரத்தை காட்டுங்கள் அல்லது பதவி விலகுங்கள்! - நிர்மலாவுக்கு ராகுல் சவால்!

நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியுள்ளார்

Advertisement
இந்தியா

ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை கூறுகிறார் நிர்மலா என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

பொதுத்துறையை சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒப்பந்தம் செய்த ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் அல்லது பதவி விலகுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தினார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

மேலும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

Advertisement

ஆனால் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட அளவுக்குக் கூட ஒப்பந்தம் வரவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், நிர்மலா கூறுவது பொய் என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேசி ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை அவர் கூறிவருவதாக தெரிவித்தார்.

Advertisement

மேலும், நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே இந்துஸ்தான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே அந்த நிறுவனம் ரூ.1000 கோடி கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal.

Advertisement