This Article is From Jun 12, 2019

சென்னையை அச்சுறுத்தி வந்த சைக்கோ கொலைகாரன் கைது!

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்து கொடூர செயலில் ஈடுபட்டு, சென்னையை அச்சுறுத்தி வந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை ரெட்டேரி மேம்பாலத்தின் அடியில், படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் பிறப்புறுப்பை மர்ம நபர் ஒருவர் கடித்து துண்டித்துவிட்டு தப்பியுள்ளார். இதில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் பாஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், கடந்த ஜூன் 3ஆம் தேதி, கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரும், இதே பாணியில் மர்ம நபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதில், இரு சம்பங்கள் நடந்தபோதும், அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நபர் இருந்துள்ளது தெரியவந்தது.

Advertisement

இந்த சைக்கோ கொலை சம்பவத்தில் ஈடுபடும் நபர் அவர் தானா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று அந்த சைக்கோ நபரின் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர், அந்த நபரை பிடிக்க காவல்துறைக்கு உதவுமாறும் கேட்டிருந்தனர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இன்று வில்லிவாக்கம் பகுதியில் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement