বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 27, 2019

நில நடுக்கமாக அதிர்ந்த இந்திய விமானப்படையின் தாக்குதல் – பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் இந்தியா தாக்குதல் நடத்திய பாலகோட் அருகே உள்ளது. இங்கு கடந்த 2005-ல் நில நடுக்கம் ஏற்பட்டது. பின்னர் சவூதியின் உதவியால் மீட்பு பணிகள் நடந்தன.

Advertisement
இந்தியா Edited by

பாலகோட்டில் இந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமின் அமைப்பு

Islamabad:

பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் நிலநடுக்கம் போல அதிர்ந்தது என்று பாகிஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் விமானப்படை தாக்குதல் நடந்த பாலகோட் அருகேதான் கைபர் பக்துங்வா மாகாணம் அமைந்திருக்கிறது. பாலகோட்டில் அதிகாலை 3.30-க்கு இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய சுமார் 300 தீவிரவாதிகளை அழித்தது.

ஒன்றரை நிமிடத்தில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் தீவிரவாத முகாம்கள் மீது வீசப்பட்டன. இந்த நிலையில், இந்திய நடத்திய தாக்குதல் நில நடுக்கம்போல் இருந்தது என்று கைபர் பக்துங்வா மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை தாக்குதல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அதிகாலை 3.30-க்கெல்லாம் எழுந்துள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டு விட்டதாக அச்சம் கொண்டோம் என்று கிராம மக்கள் அச்சத்துடன் கூறியுள்ளனர். கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

Advertisement

இதற்கிடையே எல்லைகோட்டு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறுவதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் போர் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

மேலும் படிக்க - எல்லையில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புதல்! - இந்தியாவுக்கு எச்சரிக்கை!

Advertisement