This Article is From Jan 27, 2020

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்!! 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ராலின் ஹரி – பாரி என்ற இடத்தில் வைத்து என்கவுன்ட்டர் நடந்தது.

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்!!  2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

புல்வாமாவில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ராலின் ஹரி – பாரி என்ற இடத்தில் வைத்து என்கவுன்ட்டர் நடந்தது.

ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தன. இதையடுத்து, வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீசின் ட்விட்டர் பக்கத்தில், ‘என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. முக்கிய தகவல்கள் கிடைத்தால் அதனை தெரிவிப்போம்' என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, பந்திப்போரா போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளுக்கு அனைத்து வித உதவிகளையு செய்யும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். கைதானவர்கள், படகுகள் மூலமாக கடத்துதல், வெடி பொருட்களை கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்தல் போன்றவற்றை தீவிரவாதிகளுக்கு செய்து கொடுத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

.