This Article is From Dec 28, 2018

வேற்றுகிரக வாசிகளை பார்த்தாக பிரதமருக்கு வந்த கடிதம்! நடந்தது என்ன?

மன வியாதி கொண்ட 47 வயது நபர் ஒருவர் இந்த கடிதத்தை அனுப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டது

வேற்றுகிரக வாசிகளை பார்த்தாக பிரதமருக்கு வந்த கடிதம்! நடந்தது என்ன?
Pune:

புனேயில்கோதாருட் என்னும் இடத்தில் உள்ள தனது வீட்டின் அருகே வேற்றுகிரக வாசிகளை பார்த்ததாக பிரதமரின் அலுவலக மின்அஞ்சலுக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புனே போலீசார் தீவிரவேட்டைக்கு பிறகு கண்டறிந்த உண்மை. மேலும் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் மன வியாதி கொண்ட 47 வயது நபர் ஒருவர் இந்த கடிதத்தை அனுப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டது. 

‘அவருக்கு மூளையில் இரத்த அழுத்த குறைபாடு சில வருடங்களுக்கு முன் ஏற்பட்டதாகவும், சில மாதங்களுக்கு முன் தங்களது வீட்டின் முன்னர் வெளிச்சத்தை கண்டதாகவும் கூறினார்.   அவைகளை வேற்றுகிரக வாசிகள் என அவர் நம்பவு செய்தார்' என போலீஸ் அதிகாரிகள் தகவல் அளித்தனர். மேலும் இந்த வேற்றுகிரக வாசிகள் தங்களது கிரகத்திற்க்கு பூமியைப் பற்றி முக்கியமான தகவல்களை அனுப்புவதாக, அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.                                                      

இச்சம்பவத்தை பற்றி அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது அவர் இப்படி பிரதமருக்கு கடிதம் எழுதியதை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என கூறினார்கள்.

.