Pune:
புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று லாரியின் மீது மோதிய விபத்தில் 9 மாணவர்கள் பலியாகியுள்ளனர். புனே நகரிலிருந்து 20 கி,மீ தூரத்தி உள்ள கடம்வாக்வஸ்தி அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாணவர்கள் ராய்கரிலிருந்து அவர்களின் சொந்த ஊரான யாவத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது சோலாபூரில் விபத்து நிகழ்ந்துள்ளது. கார் நேராக வந்து கொண்டிருந்த லாரியில் மோதியது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காரில் இருந்த 9 பேரும் 19-23 வயதுக்குள் உள்ள மாணவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
Advertisement
இறந்தவர்களின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
COMMENTS
Advertisement