This Article is From Apr 11, 2020

இந்தியாவில் 2வது மாநிலமாக ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த பஞ்சாப்!

ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு 3 வாரங்கள் நிறைவடைய உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus: இந்தியாவில் 2வது மாநிலமாக ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த பஞ்சாப்!

ஹைலைட்ஸ்

  • ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த பஞ்சாப்
  • பஞ்சாபில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
  • ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்
Chandigarh:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.1ம் தேதி வரை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஓடிசா மாநிலத்தைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் மாநிலமும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு 3 வாரங்கள் நிறைவடைய உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். நகரங்களிலிருந்து இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பும் நிர்பந்திக்கப்பட்டுள்ளளனர். எனினும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அதனைவிட முக்கியமானது என அனைத்து மாநிலங்களும் தெரிவித்துள்ளன.

கோடிக்கணக்கான மக்கள் சேரிப்பகுதியில் வாழும் நாட்டில், வைரஸ் தொற்று பரவினால் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது போன்ற நாட்டில், சமூக விலகல் என்பது சாத்தியமற்ற ஒன்று, சுகாதாரப் பாதுகாப்பு என்பதும் பெரும் சவாலானது. 

இதுபோன்ற நெருக்கடி தற்போது மும்பைக்கு ஏற்பட்டுள்ளது. அதிகமான சேரிப்பகுதியைக் கொண்ட மும்பையில், தற்போது 1,100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் காரணமாக ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கும் அறிவிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, மும்பையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை சில வீடியோ காட்சிகள் விவரித்தன.  அதேநேரத்தில், மகாராஷ்டிராவில் சில தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

அதேபோல், பஞ்சாபிலும் தற்போது சில மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அறுவடை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரி விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, உலகின் பிற பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைவு தான். ஊரடங்கு உத்தரவை கையாளுவது கடினமாக இருந்தாலும், அதுவே அதிகளவு பாதிப்பு ஏற்படாமல் தடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவது குறித்து சுகாதார வல்லுநர்களின் கணிப்புகள் கொடூரமானதாகவும், பயமுறுத்துவதாகவும் உள்ளது என்றார். 

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டி, செப்டம்பர் இடையே இந்த வைரஸ் உச்சத்தை எட்டக்கூடும் என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 58 சதவீத மக்களையும், பஞ்சாபில் 87 சதவீத மக்களையும் பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.