বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 30, 2019

பஞ்சாபில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரி அலுவலகத்திலேயே சுட்டுக்கொலை!!

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு பிரிவில் மண்டல அளவில் அதிகாரியாக நேஹா ஷோரி என்ற பெண் நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

நேஹா ஷோரியை அவரது அலுவலகத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.

Chandigarh:

பஞ்சாபில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியை அவரது அலுவலகத்தில் வைத்தே ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். சண்டிகர் அருகேயுள்ள கரார் என்ற நகரில் இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கிறது.

குற்றவாளி பெண் அதிகாரி நேஹா ஷோரியை 2 முறை சுட்டுள்ளார். அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதன்பின்னர் நேஹாவை கொன்றவர் தன்னையும் சுட்டிருக்கிறார். இதை கண்டவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண் அதிகாரி நேஹா ஷோரி, கராரில் மண்டல அளவில் உணவு கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரியாக செயல்பட்டவர்.

Advertisement

எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் உடனடியாக தெரியவரவிலலை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement