This Article is From Jan 10, 2020

ட்ரோன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்திய 3 பேர் கைது!

கிட்டதட்ட ரூ.6.22 லட்சம் பணம் அவர்கள் மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்திய 3 பேர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தியுள்ளனர். (Representational)

Chandigarh:

ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தலைமை காவல் ஆணையர், ஒரு ட்ரோன் மோதி கிராமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு ட்ரோன் கர்ணல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த ட்ரோன்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் போதைப் பொருட்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

இது சம்பந்தமாக தர்மேந்தர், பால்கர் மற்றும் ராகுல் ஆகிய 3 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர். கிட்டதட்ட ரூ.6.22 லட்சம் பணம் அவர்கள் மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

.