Read in English
This Article is From Feb 14, 2019

ரூ. 2.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணன் – ராதை சிலைகள் மீட்பு

கிருஷ்ணனின் சிலை 18 கிலோவும், ராதை சிலை 12 கிலோவும் இருந்தன

Advertisement
இந்தியா

சர்வதேச சந்தையில் இந்த சிலைகளின் மதிப்பு ரூ. 2.5 கோடி.

Bhubaneswar:

ஒடிசாவில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 2.5 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

புவனேஸ்வரத்தில் சிலைகள் பதுக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜதுப்பூர் கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் காக்கா ராஜா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின்படி 18 கிலோ எடை கொண்ட கிருஷ்ணன் சிலையும், 12 கிலோ எடைகொண்ட ராதையின் சிலையும் மீட்கப்பட்டுள்ளது.

காக்கா ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகள் வைத்திருந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் கைது சம்பவம் நடந்திருக்கிறது.

Advertisement

இந்த இரு சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 2.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
Advertisement