This Article is From Jul 30, 2019

சம்பளம் வாங்குவது குறித்து ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து?

ஹாலிவுட் படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால், ஹாலிவுட்டில் மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள்

Advertisement
Entertainment Edited by

Highlights

  • கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே
  • லிபர்டி எ கால் டு ஸ்பை என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார் இவர்

தமிழ், இந்தி உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவருடைய வெளிப்படையான பேச்சு அவ்வப்போது டிரெண்டாகி சர்ச்சையாக மாறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

ராதிகா ஆப்தே “லிபர்டி எ கால் டு ஸ்பை என்கிற ஹாலிவுட் படத்தில் தற்போது உளவாளியாக நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். உளவாளியாக இருக்கும் இந்திய இளவரசியாக நடிக்க நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.

ஹாலிவுட் படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராதிகா,

 ‘படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி ஸ்டைல் உண்டு. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால், ஹாலிவுட்டில் மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள், மேலும் சரியான நேரத்திற்கு சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் கையேந்த தேவையில்லை'. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தற்போது இந்திய சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement