New Delhi :
இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அக்ஷய் குமாரை நடிக்கும் படமான லக்ஷ்மி பாமினை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் பணத்தை விட தன்மானம் முக்கியம், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று கூறி மரியாதை இல்லை என்ற காரணத்தினால் படத்திலிருந்து விலகினார்.
தற்போது “அக்ஷய் குமார் என்னுடைய உணர்வினை புரிந்து கொண்டார், தயாரிப்பாளர் ஷபினா கானுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மரியாதை அளித்த இருவருக்கும் நன்றி” என்று கூறியிருந்தார்.
Advertisement
தமிழில் வெளிவந்த நகைச்சுவையும் த்ரல்லரும் இணைந்த திரைப்படமான காஞ்சனா திரைக்கதை தான் லக்ஷ்மி பாமின் திரைக்கதையாக உள்ளது. காஞ்சனா படத்தில் திருநங்கையாக ஆர். சரத்குமார், ராகவா லாரன்ஸ், லக்ஷ்மி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் ஸ்ரீராமன் ஆகியோர் நடித்துள்ளன.
Advertisement
COMMENTS
Advertisement