This Article is From Jan 27, 2019

கோவாவில் ராகுல், சோனியா 3 நாட்கள் சுற்றுலா பயணம்

சிறப்பு விமனத்தின் மூலம் ராகுலும், சோனியாவும் கோவா வந்துள்ளனர். தெற்கு கோவா பகுதியில் 5 நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர்.

கோவாவில் ராகுல், சோனியா 3 நாட்கள் சுற்றுலா பயணம்

தெற்கு கோவாவில் உள்ள ரிசார்ட்டில் இருவரும் தங்கியிருப்பார்கள் என தகவல்

Panaji:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரது தாயார் சோனியா காந்தியும் கோவாவில் 3 நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இருவரும் சிறப்பு விமானம் மூலமாக கோவா சென்றுள்ளனர். தெற்கு கோவா பகுதியில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தி 4-வது முறையாக கோவா வந்துள்ளார். முன்னதாக 2017-ல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ராகுலும், சோனியாவும் கோவா வந்திருந்தனர். 

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுனில் கவ்தங்கர் கூறுகையில், சோனியாவும், ராகுலும் தனிப்பட்ட முறையில் கோவா வந்துள்ளனர். இந்த பயணத்தின்போது அவர்கள் கட்சி தலைவர்கள் எவரையும் சந்திக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். 

இன்னும் சில வாரங்களில் கோவா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மக்களவை தேர்தல் குறித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 

.