This Article is From Aug 08, 2018

கருணாநிதி மறைவு: ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

சென்னை வந்தடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

Advertisement
இந்தியா Posted by

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் நல்லுடலுக்கு ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்

உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதால், நேற்று மாலை 6.10 மணிக்கு இயற்கை ஏய்தினார். ராஜாஜி அரங்கில் வைக்கப்படிருக்கும் கருணாநிதியின் உடலுக்கு முக்கிய தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

இன்று, சென்னை வந்தடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவை அடுத்து, “இந்தியா மிகச்சிறந்த புதல்வனை இழந்துவிட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர்” என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

மேலும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சனைக்கு, மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement