This Article is From Jan 29, 2019

‘5 ஆண்டு மோடி ஆட்சி சாதனை இதுதான்!’- கேரளாவில் ராகுல் போர் முழக்கம்

மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன

Advertisement
இந்தியா Posted by

களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக, வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

Highlights

  • கேரளா சென்றுள்ளார் ராகுல் காந்தி
  • அங்கு இன்று பொதுக் கூட்டத்தில் பேசினார் ராகுல்
  • உரையின் போது, மோடியை வறுத்தெடுத்தார் ராகுல்

மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக, வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இன்று கேரளாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியர்களின் நேரத்தை வீண்டித்துக் கொண்டிருந்தார். அவர் பொய்க்கு மேல் பொய்யாக சொல்லிக் கொண்டிருந்தார்' என்று காரசாரமாக பேசியுள்ளார். 

அவர் தொடர்ந்து, ‘ஓர் ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மோடி சொன்னார். எங்கே அந்த வேலைகள். தனது 15 முக்கிய நண்பர்களுக்கு மட்டும் பணம் கொட்டும் படி ஆட்சி செய்தார் மோடி. நீங்கள் அனில் அம்பானியாக இருந்தால், உங்களின் வருவாய் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால், நாங்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம். 

நாங்கள் சமீபத்தில் பொறுப்பேற்ற 3 மாநிலங்களில் விவசாயக் கடனை உடனடியாக தள்ளுபடி செய்தோம். இப்போது நாங்கள் உங்கள் முன்னிலையில் ஒரு சத்தியம் செய்கிறோம். 2019 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிராக செய்த எல்லா தவறுகளையும் சரிகட்டுவோம்' என்று பேசினார். 
 

Advertisement
Advertisement