பீகாரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ள இருந்தார்.
New Delhi: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து பீகார் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நடுவழியிலேயே விமானம் டெல்லி திரும்ப நேரிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் தனது டிவிட்டர் பதிவில், பட்னாவிற்கு செல்லும் வழியில் விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால், நடுவழியிலேயே விமானம் டெல்லி திரும்ப நேரிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன், காரணமாக பீகார், ஓடிசா மற்றும் மகராஷ்டிராவில் இன்று நடக்க இருந்த தேர்தல் பிரசாரம் தாமதமாகும் என்றும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில், பதற்றத்துடன் காணப்படும் ராகுல், வீடியோ எடுக்கும் நபரை பார்த்து, போனை ஸ்விட்ச் ஆப் செய்யுங்கள் என்கிறார்.