Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 20, 2019

‘’காங்கிரசின் செல்ல மகள் ஷீலா தீட்சித்’’ – ராகுல் காந்தி உருக்கம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஷிலா தீட்சித்தின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் 3 முறை பொறுப்பு வகித்திருக்கிறார்.

New Delhi:

காங்கிரசின் அன்பு மகள் ஷீலா தீட்சித் என்றும், அவரது மறைவு பேரிழப்பு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித், 81 வயதில் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார். ஷீலா தீட்சித்தின் இறப்பு குறித்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 

டெல்லி காங்கிரஸின் தலைவராக இருந்த தீட்சித், 1998 முதல் 2013 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார். 

2014 ஆம் ஆண்டு அவர் கேரள மாநில ஆளுநராக ஆக்கப்பட்டார். ஆனால் 6 மாதத்தில் அந்தப் பதவியைத் துறந்தார் தீட்சித்.

Advertisement

ஷீலா தீட்சித் மறைவை அடுத்து காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஷீலா தீட்சித் இறப்பு குறித்து வரும் செய்தியால் நாங்கள் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் ஸ்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, “மிகவும் கரிசனமான மனம் கொண்டவர் ஷீலா தீட்சித். டெல்லியின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தகும் அளவுக்கு அவர் உழைத்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் பதிவில், ‘ஷீலா தீட்சித்தின் இரங்கல் செய்தி பேரதிர்ச்சியை அளித்தது. அவர் காங்கிரசின் செல்ல மகள். அவரிடம் தனிப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளேன்.

அவரை இழந்துள்ள குடும்பத்தார், மெல்லி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ' என்று கூறியுள்ளார்.

Advertisement