Read in English
This Article is From Jun 28, 2018

ரயில்களை தடம்புறள வைக்க தீவிரவாதிகள் பிளான்!?- அலெர்ட்டில் ரயில்வே துறை!

‘தீவிரவாதிகளுக்கு ரயில்களை தடம்புறள வைக்க பிளான் இருப்பதால், ஜாக்கிரதையாக இருங்கள்’ என்ற எச்சரிக்கையை ரயில்வே நிலையங்களுக்கு மீண்டும் அனுப்பியுள்ளது

Advertisement
இந்தியா

Highlights

  • அல்-கொய்தா அமைப்பிடமிருந்து இந்த மிரட்டல் வந்துள்ளதாக தகவல்
  • சென்ற மாதமே இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது
  • மீண்டும் தற்போது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
New Delhi:

இந்தியாவின் வடக்கு ரயில்வே துறை, ‘தீவிரவாதிகளுக்கு ரயில்களை தடம்புறள வைக்க பிளான் இருப்பதால், ஜாக்கிரதையாக இருங்கள்’ என்ற ஒரு மாத பழைய எச்சரிக்கையை ரயில்வே நிலையங்களுக்கு மீண்டும் அனுப்பியுள்ளது. இதனால், ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.

உண்மை என்னவென்றால், மே மாதமே இந்த சுற்றறிக்கை ரயில்வே நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது, மீண்டும் அதே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது தான் பதற்றத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை, தீவிரவாத அமைப்புகள் ரயில்களை தடம்புறள வைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையை கடந்த மாதம் எச்சரித்தது. அப்போதே, இது குறித்து சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

இது விவகாரம் பற்றி டெல்லி மண்டலத்தின் டிவிஷனல் மேலாளர் ஆர்.என்.சிங், ‘முன்னரே அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தான் மீண்டும் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. ஒரு ஜூனியர் அதிகாரி அவசரப்பட்டு இப்படிப்பட்ட சுற்றறிக்கையை அனுப்பிவிட்டார். யாரும் இதனால் பதற்றப்பட வேண்டாம். ரயில்வே நிலையங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

முதல் சுற்றறிக்கை மே மாதம் அனுப்பப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் தேதி அதே சுற்றறிக்கை மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ‘அல் கொய்தா தீவிரவாத அமைப்பிடமிருந்து ரயில்களை தடம்புறளச் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே நிலையங்களில் இருக்கும் அதிகாரிகள் வழக்குத்துக்கு மாறாக எதையாவது பார்த்தால் அது குறித்து உடனடியாக விசாரணை செய்யவும். கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement