This Article is From Oct 26, 2018

‘என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது!’- ரஜினி பன்ச்

அறிக்கையில், ‘என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்

‘என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது!’- ரஜினி பன்ச்

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது' என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த 23 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன.கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.

நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம்.
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது. 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்' என்று ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய அறிக்கையில், ‘கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து சில உண்மையகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருக்கும் உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

9mco6h8o

உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும், யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்' என்று குறிப்பிட்டுள்ளார். 

.