This Article is From Dec 13, 2018

மேகதாது விவகாரம்: ரஜினி பரபர கருத்து!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மேகதாது விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

மேகதாது விவகாரம்: ரஜினி பரபர கருத்து!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மேகதாது விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட அறிக்கை தயாரித்தலுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதன் மூலம் மத்திய அரசு, தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதாக பார்க்கிறீர்களா?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரஜினி, ‘மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதால், தமிழகத்துக்கு வரும் தண்ணீரில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து சட்டபூர்வமான விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் சரியாக இருக்கும்' என்று கூறினார்.

தொடர்ந்து, ‘ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவி-யிலிருந்து விலகியுள்ளார். அவர் உங்கள் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது..' என்றதற்கு, ‘அப்படி வரும் தகவலில் எந்த வித உண்மையும் இல்லை. அனைத்தும் வதந்தியே' என்று முடித்துக் கொண்டார்.

.