This Article is From Jan 23, 2020

“ரஜினி என்னும் புதிய கருவி..!”- சூப்பர்ஸ்டார் மீது அடுக்கடுக்காக விமர்சனங்களை அடுக்கும் சுப.வீ!!

Rajinikanth Periyar Row: "ரஜினியின் மூலம், இந்துக்களுக்கு எதிரானது திராவிட இயக்கம் என்னும் சிந்தனையை மீண்டும் விதைக்க முயல்கின்றனர்"

“ரஜினி என்னும் புதிய கருவி..!”- சூப்பர்ஸ்டார் மீது அடுக்கடுக்காக விமர்சனங்களை அடுக்கும் சுப.வீ!!

Rajinikanth Periyar Row: "இந்த நாட்டில், இந்துக்களுக்கு எதிராகத் திராவிட இயக்கம் மட்டுமில்லை, பிற மதத்தினரும் நடந்து கொண்டதில்லை"

Rajinikanth Periyar Row: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து வரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், அவரை அடுக்கடுக்காக விமர்சித்துள்ளார்.

“இந்திய அரசியலுக்கும், தமிழக அரசியலுக்கும் இடையே எப்போதும் ஒரு அழுத்தமான வேறுபாடு உண்டு. மத அடிப்படையில் வடநாட்டில் அரசியல் நடத்துவது எளிது. பலமுறை அவ்வாறுதான் நடந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், சென்ற நூற்றாண்டின் தொடக்கம் தொடங்கி, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் அரசியலே முதன்மை பெற்றுள்ளது. அதனையே ஆரிய-திராவிடப் போராட்ட அரசியல் என்றும் கூறுகின்றோம். அதன் காரணமாகவே, இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

அந்தத் திராவிட இயக்க அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சியில் இப்போது நம் கருத்து எதிரிகள் இறங்கிவிட்டனர். அதற்குப் பல கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்தக் கருவிகளில் ஒன்றுதான் ஆரிய-திராவிடப் போர் என்பதைத் தமிழ்த்தேசியர் என்று சொல்லிக்கொள்வோரைக் கொண்டு தமிழ்-திராவிடம் என்னும் புதிய எதிர்வுகளை உருவாக்க முயல்வது. இப்போது அவர்கள் கையாளத் தொடங்கியிருக்கும் இன்னொரு புதிய கருவியின் பெயர் ரஜினிகாந்த்.

ரஜினியின் மூலம், இந்துக்களுக்கு எதிரானது திராவிட இயக்கம் என்னும் சிந்தனையை மீண்டும் விதைக்க முயல்கின்றனர். இந்த நாட்டில், இந்துக்களுக்கு எதிராகத் திராவிட இயக்கம் மட்டுமில்லை, பிற மதத்தினரும் நடந்து கொண்டதில்லை. இந்துக்கள் எனப்படுவோரை இழிவு படுத்தியவர்கள், படிக்கக்கூடாது என்று தடுத்தவர்கள், அவர்களின் திருமணம், துக்கம் உள்பட எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பார்ப்பனர்கள்தாம்!

எனவே இந்துக்களுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்கள் மட்டுமே! இந்த உண்மையை நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பாஜகவில் இருக்கும் மற்றவர்களைக் கூடத் தவிர்த்துவிட்டு, பாபர்ப்பனர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் மட்டுமே அத்தனை அழிவிற்கும், இழிவிற்கும் காரணம் என்பதைத் தொடர்ந்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.”  என்று விளக்கமாக ரஜினியின் மீதான விமர்சனங்களை சுட்டிக்காட்டியுள்ளார் சுப.வீரபாண்டியன். 


 

.