Read in English
This Article is From Jan 23, 2019

பிப்ரவரியில் ரஜினியின் 2வது மகளுக்கு டும் டும் டும்..!?

சௌந்தர்யா, தனது தந்தை ரஜினியின் ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ போன்ற படங்களில் கிராஃபிக் டிசைனராக பணி செய்துள்ளார்

Advertisement
Entertainment Posted by

தனுஷை வைத்து ‘விஐபி 2’ படத்தையும் இயக்கினார் சௌந்தர்யா

Highlights

  • பிப் 9-ல் திருமண முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு
  • ஐஸ்வர்யா தனுஷ், திருமண ஒருங்கிணைப்பு செய்கிறார்
  • சென்னையில் திருமணம் நடைபெறும் எனத் தகவல்
New Delhi:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, தொழிலதிபர் விஷாகன் வணங்காமுடியுடன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வந்துள்ளது. 

பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் திருமணத்துக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ல் கல்யாணம் நடைபெறும் என்றும் தகவல் வந்துள்ளது. ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் திருமணத்துக்கு முன்னர் பெரிய பூஜை ஒன்று நடத்தப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 

 

 

கடந்த ஆண்டு விஷாகனுக்கும் சௌந்தர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் காதல் ஜோடி கல்யாணத்துக்கு படு ஜோராக தயாராகி வருகிறார்கள். 

Advertisement

கடந்த 2010 ஆம் ஆண்டு, சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஷ்வினுக்கும் கல்யாணம் ஆனது. அவர்கள் 2017 வரை சேர்ந்து வாழ்ந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை காரணமாக விவகாரத்து பெற்று விட்டனர். அஷ்வின்- சௌந்தர்யாவுக்கு வேத் என்கின்ற 3 வயது மகன் இருக்கிறார். 

சௌந்தர்யா, தனது தந்தை ரஜினியின் ‘சந்திரமுகி', ‘சிவாஜி' போன்ற படங்களில் கிராஃபிக் டிசைனராக பணி செய்துள்ளார். ‘கோச்சடையான்' என்கின்ற அனிமேஷன் படத்தின் மூலம் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் தனுஷை வைத்து ‘விஐபி 2' படத்தையும் இயக்கினார் சௌந்தர்யா.  விஷாகன், ‘வஞ்சகர் உலகம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். 
 

Advertisement
Advertisement