This Article is From Sep 17, 2018

ராஜீவ் வழக்கு : 7 பேரை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி

Advertisement
தெற்கு Posted by

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரைக்கும் 7 பேரை விடுவிப்பதில் சிக்கல் ஏதும் இல்லாதிருந்த நிலையில் தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பியுள்ளது.

1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அவருடன் சிலர் உயிரிழந்தனர். அவர்களில் அப்பாஸ் என்பவரது தாயாரும் ஒருவர். தாயார் கொல்லப்பட்டபோது 8 வயது சிறுவனாக இருந்த அப்பாஸுக்கு தற்போது 35 வயது ஆகிறது.

கடந்த 2014-ம் ஆண்டின்போது 7 பேரை விடுதலை செய்வதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து அப்பாஸ் உள்பட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisement

தற்போது, 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் அப்பாஸ் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அவர் கேட்டிருக்கிறார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த 4 வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு 7 பேரின் விடுதலையில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement