বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 15, 2020

இந்தியா-நேபாளம் இடையே பிரச்சினை இருந்தால் பேசி தீர்ப்போம்: ராஜ்நாத் சிங்

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று முன்தினம் அந்த நேபாள நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

Advertisement
இந்தியா

இந்தியா-நேபாளம் இடையே பிரச்சினை இருந்தால் பேசி தீர்ப்போம்: ராஜ்நாத் சிங்

Highlights

  • பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்
  • இரு நாடுகளுக்கு இடையிலான உறவை உலகில் எந்த சக்தியாலும் முறிக்க முடியாது
  • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு சாதாரணமானது அல்ல
New Delhi:

இந்தியா - நேபாளம் இடையே பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை உலகில் எந்த சக்தியாலும் முறிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். 

வெகுஜன ஊடக பேரணியில் காணொளி கட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, இந்தியாவுக்கும் - நேபாளத்திற்கும் இடையே பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்றார். இந்திய பகுதிகளை சேர்த்து தனது வரைபடத்தை நேபாளம் மாற்றி அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

பார்டர் ரோடு அமைப்பால் (BRO) லிபுலேக் வரை இணைப்பு சாலையை உருவாக்கப்பட்டுள்ளது. இது மன்சரோவருக்கு ஒரு புதிய வழியைக் கொண்டு வந்துள்ளது. 80 கி.மீ நீளமுள்ள சாலை, இது இந்திய பிராந்தியத்தில் கட்டப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சாலை தொடர்பாக நேபாளத்தில் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. ஆனால் நேபாளத்தைப் பொருத்தவரை, அவர்களுடன் சமூக, புவியியல், வரலாற்று அல்லது கலாச்சார உறவுகள் மட்டுமல்ல, பக்தி உறவும் இருக்கிறது என்று நான் கூற விரும்புகிறேன் என ராஜ்நாத் கூறினார். 

மேலும், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு சாதாரணமானது அல்ல, ஆனால் ரோட்டி மற்றும் பேட்டி உறவு என்றார்.

Advertisement

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று முன்தினம் அந்த நேபாள நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

ஆனால், இந்தியா அந்த வரைபடத்தை ஏற்க மறுத்துள்ளது. இது வரலாற்று உண்மைகள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாத "ஒருதலைப்பட்ச செயல்" என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

Advertisement