বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 29, 2019

'அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்' : ரவிசங்கர்!!

நாட்டின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றான அயோத்தி கோயில் விவகாரத்தில் கடந்த 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by
Nagpur:

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் மக்கள் மத்தியில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் என்று ஆன்மிகவாதியும், உச்ச நீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவின் உறுப்பினருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றான அயோத்தி கோயில் விவகாரத்தில் கடந்த 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆன்மிகவாதியும், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவில் இடம்பெற்றவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது-

அயோத்தில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் இந்து - முஸ்லிம் மக்களிடையே அமைதி, சகோதாரத்துவத்தை ஏற்படுத்தும். நாட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், மிக நீண்டகால கனவுமான அயோத்தி  ராமர் கோயில் கட்டி எழுப்பப்பட உள்ளது. 

Advertisement

கோயிலை கட்டுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் கோயிலை கட்டும் பணிகள் தொடங்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Advertisement
Advertisement