This Article is From Aug 28, 2018

மூக்கையூர், பாம்பன் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

113 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம், வரும் மார்ச் மாதம் திறக்கப்படும்

மூக்கையூர், பாம்பன் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பன் குந்துகால் பகுதிகளில் நடைப்பெற்று வரும் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்

70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள மீன்கள் இறக்குத் தளத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இத்தளத்தில் 250 படகுகள் நிறுத்தி வைக்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன என்றார்

மேலும், 113 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம், வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்றார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.