This Article is From Jul 31, 2019

விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கும் தெலுங்கு நடிகர் ராணா?

தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் நடந்து வருகிறது

Advertisement
Entertainment Edited by

Highlights

  • விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சிலர்
  • ராணா இப்படத்தை இணைந்து தயாரிக்க இருக்கிறார்
  • இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்  என்கிற அறிவிப்பு அன்மையில் வெளியானது. இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருந்த போதிலும் இப்படத்தின் பனிகள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன் என்பதால் இந்த படத்திற்கு “800” என பெயரிடப்பட்டுள்ளது.

எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார் என செய்திகள் வருகிறது.

Advertisement

தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன், மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement