Read in English
This Article is From Sep 14, 2018

சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார்: பிரபல சாமியார் கைது

பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியாரின் மகன் சமர் கானும் கைதாகி சிறையில் உள்ளார்

Advertisement
இந்தியா

சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைதாகியிருக்கும் ஆஷு மகராஜ்

New Delhi:

டெல்லியைச் சேர்ந்த ஆசிஃப் கான் (எ) ஆஷு மகராஜ் என்பவர் தன்னை சாமியாராக அறிவித்து ஆசிரமம் நடத்தி வருகிறார். அவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் சாமியார் ஆசிஃப் கான் (எ) ஆஷு மகராஜை கைது செய்துள்ளனர். அவரது மகனான சமர் கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியாரின் மகன் சமர் கானும் கைதாகி சிறையில் உள்ளார்.

இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் தனது புகாரில் சாமியார், அவரது நண்பர்கள் மற்றும் அவரது மகன் ஆகியோர் தன்னை கடந்த 2008-லிருந்து 2013-வரை பலமுறை பலாத்காரம் செய்தார் என்றும், தனது மகளான சிறுமியை அழைத்து வரச் சொன்ன சாமியார் அவரையும் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சாமியார் மீது ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்கு கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement