Read in English
This Article is From Aug 30, 2018

‘2019 தேர்தலுக்கு ரெடி..!’- கமல்ஹாசன் பளீச்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார்’ என்று கருத்து கூறியுள்ளார்

Advertisement
தெற்கு
Madurai:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார்’ என்று கருத்து கூறியுள்ளார்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி, 5 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. இதையொட்டி, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து கமல், ‘நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாங்கள் அதைச் சந்திக்கத் தயார்’ என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதியும், அதிமுக-வின் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருப்பரங்குன்றம் தொகுதியும் அவர்கள் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் சீக்கிரமே இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்று கேள்வி கேட்டதற்கு கமல், ‘தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு இந்தத் தேர்தலின் மூலம் பாடம் புகட்டுவோம். ஆனால், நேரடியாக தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை’ என்றுள்ளார்.

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement